பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனா தொற்று பரவலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது. இதனால் நோயை கட்டுப்படுத்த அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் சினிமாத்துறையில் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இனிமேல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதி என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது திரையுலகினர் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போட்டோக்களையும் வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், ரஜினிகாந்த், நயன்தாரா, விக்னேஷ் சிவன் என பல பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், நடிகை கீர்த்தி சுரேசும் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.