என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான நேனு லோக்கல் படத்தை தொடர்ந்து மீண்டும் நானி, கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் தசரா. இந்த படம் வரும் மார்ச் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்தது தனக்கு மிகவும் திருப்தி அளித்ததாக கருதிய கீர்த்தி சுரேஷ் படக்குழுவினர் 130 பேருக்கு தலா 10 கிராம் தங்க காசுகளை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கீர்த்தி சுரேஷின் இந்த செயலே இந்த படத்தை பற்றி இன்னும் அதிக அளவில் பேச வைத்துவிட்டது. இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகுபலி புகழ் நடிகர் ராணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் பாட்டில் சேலஞ்ச் ஒன்றை வைத்தார். அதன்படி சிறிய கூல்ட்ரிங்ஸ் பாட்டில் ஒன்றை வாயில் கவ்வியபடி கைகளில் பிடிக்காமலேயே அதில் உள்ள குளிர்பானம் முழுவதையும் குடிக்க வேண்டும் என்பதுதான் இந்த சேலஞ்ச். இதை நானி, ராணா இருவரும் அசால்ட்டாக நிறைவேற்றி விட, அவர்களை தொடர்ந்து தன் பங்கிற்கு தானும் ஒரு பாட்டிலை எடுத்து இந்த சேலஞ்சை வெற்றிகரமாக செய்து முடித்தார் கீர்த்தி சுரேஷ். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.