மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
ஸ்லம் டாக் மில்லியனர் என்கிற படத்திற்காக சிறந்த சவுண்டு இன்ஜினியர் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றவர் மலையாள திரை உலகை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்களில் பணியாற்றி வரும் இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தி சவுண்ட் ஸ்டோரி' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ள ரசூல் பூக்குட்டி மலையாளத்தில் 'ஒட்ட' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் மம்தா மோகன்தாஸ், ஆசிப் அலி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அதைவிட முக்கியமாக நடிகை ஷோபனா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த எண்பதுகளின் இறுதியில் வெளியான வாத்தியார் வீட்டு பிள்ளை மற்றும் மல்லுவேட்டி மைனர் என இரண்டு படங்களில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷோபனா. இந்த நிலையில் 32 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் தற்போது மலையாள படத்திற்காக இணைந்துள்ளது உண்மையிலேயே ஆச்சரியமான நிகழ்வுதான்.