மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
சிவகுமார் போன்று பெரிய நடிகராக வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் இருந்து வந்தவர் சத்யராஜ். சிவகுமாரின் உறவினரும்கூட. ஆரம்பத்தில் சிவகுமாரின் சிபாரிசில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த சத்யராஜ், பின்னர் வில்லன் வேடங்களில் தனி முத்திரை பதித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
வில்லனாகவே நடித்து வந்த அவரை ஹீரோவாக்கிய படம் 'சாவி'. கார்த்திக் ரகுநாத் என்பவர் இயக்கிய இந்த படம் 'டயல் ய மர்டர்' என்ற அமெரிக்க படத்தின் தழுவல். இந்த கிரைம் திரில்லர் படத்தில் சத்யராஜுடன் சரிதா, ஜெய்சங்கர், நிழல்கள் ரவி, கவுண்டமணி, அனுராதா, டிஸ்கோ சாந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.
முன்னாள் டென்னிஸ் வீரரான சத்யராஜ், சமூக ஆர்வலரும், பணக்கார பெண்ணுமான சரிதாவை காதலித்து திருமணம் செய்கிறார். ஆனால் சரிதா சகஜமாக எல்லா ஆண்களுடன் பழகுகிறவர் என்பதால் அவர்களில் யாராவது ஒருவர் மீது சரிதாவுக்கு காதல் வந்து விட்டால் என்ன ஆகும் என சந்தேகம் கொள்ளும் சத்யராஜ், சரிதாவுடன் நெருங்கி பழகும் ஆண்களை பழி வாங்குவது மாதிரியான கதை. படம் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது. சத்யராஜின் நடிப்பு பேசப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.