பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

புகழ்பெற்ற தெலுங்கு நாடகம் 'என்ஜிஓ'. ஆந்திரா முழுவதும் பரவலாக நடத்தப்பட்டு வந்த நாடகம். நடுத்தர வர்க்கத்தின் பிரச்னைகளை பேசியதால் நாடகத்திற்கு பெரிய வரவேற்பு இருந்து. குமாஸ்தாவாக பணியாற்றும் ஒருவர் தனது பெரிய குடும்பத்தை காப்பாற்ற போராடுவதுதான் நாடகத்தின் கதை. ஆச்சார்யா ஆத்ரேயா என்பவர் இந்த நாடகத்தை எழுதினார்.
இந்த நாடகம், 'குமாஸ்தா' என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் சினிமா ஆனது. குமாஸ்தாவாக சித்தூர் நாகைய்யா நடித்தார், அவரது மனைவியாக ஜெயம்மா நடித்தார், தங்கையாக பண்டரிபாய் நடித்தார், வில்லனாக நரசிம்ம பாரதி நடித்தார்.
ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கிய இந்த படத்திற்கு சி.என்.பாண்டுரங்கன், ஜி.ராமநாதன், நாகய்யா ஆகிய மூவரும் இசை அமைத்தார்கள். இயக்குனரே ஒளிப்பதிவாளராகவும் இருந்தார். தமிழில் தோல்வி அடைந்த இந்த படம் தெலுங்கில் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது. நாடகம் போன்று படம் இல்லை என்ற விமர்சனமும் வந்தது.