தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் |

புகழ்பெற்ற தெலுங்கு நாடகம் 'என்ஜிஓ'. ஆந்திரா முழுவதும் பரவலாக நடத்தப்பட்டு வந்த நாடகம். நடுத்தர வர்க்கத்தின் பிரச்னைகளை பேசியதால் நாடகத்திற்கு பெரிய வரவேற்பு இருந்து. குமாஸ்தாவாக பணியாற்றும் ஒருவர் தனது பெரிய குடும்பத்தை காப்பாற்ற போராடுவதுதான் நாடகத்தின் கதை. ஆச்சார்யா ஆத்ரேயா என்பவர் இந்த நாடகத்தை எழுதினார்.
இந்த நாடகம், 'குமாஸ்தா' என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் சினிமா ஆனது. குமாஸ்தாவாக சித்தூர் நாகைய்யா நடித்தார், அவரது மனைவியாக ஜெயம்மா நடித்தார், தங்கையாக பண்டரிபாய் நடித்தார், வில்லனாக நரசிம்ம பாரதி நடித்தார்.
ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கிய இந்த படத்திற்கு சி.என்.பாண்டுரங்கன், ஜி.ராமநாதன், நாகய்யா ஆகிய மூவரும் இசை அமைத்தார்கள். இயக்குனரே ஒளிப்பதிவாளராகவும் இருந்தார். தமிழில் தோல்வி அடைந்த இந்த படம் தெலுங்கில் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது. நாடகம் போன்று படம் இல்லை என்ற விமர்சனமும் வந்தது.