அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
நடிகை ஷோபனா திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்புக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் வெகுவாக கிடைத்தது. படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்து 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த சந்தோஷத்தில் இருந்த ஷோபனாவுக்கு தற்போது அவரது சிறு வயது தோழியான அனிதாவின் மரணம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவயதிலேயே கேரளாவில் இருந்து சென்னை மயிலாப்பூருக்கு பெற்றோருடன் ஷோபனா குடிபுகுந்த போது, அவரது பக்கத்து வீட்டில் வசித்தது தான் அனிதா மேனனின் குடும்பம். ஷோபனாவை விட மூன்று வயது குறைவு என்றாலும் கூட இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்தனர். ஷோபனா சினிமாவில் பிசியான காலகட்டத்தில் கூட அனிதாவுடன் நட்பை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அனிதா மேனன் மறைந்தது மிகப்பெரிய வருத்தத்தை ஷோபனாவுக்கு ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷோபனா, அனிதா மேனனுக்கு தன்னுடைய இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.