3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் தியேட்டர்களை மூடி ஒரு மாத காலம் ஆகப் போகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருட கொரோனா பரவல் மிக மிக அதிகமாக இருக்கிறது.
கடந்த வரும் மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்களை சுமார் எட்டு மாதங்கள் கழித்து நவம்பர் மாதத்தில்தான் திறந்தார்கள். முதல் முறை கொரோனா பரவல் என்பதால் தியேட்டர்களைத் திறக்க மிகவும் தயக்கம் காட்டினார்கள். அதற்கேற்றால் போல மக்களும் தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவில்லை.
இந்த இரண்டாவது அலை எப்போது குறையும் என்பது கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரமும் அதிகமாக இருக்கிறது.
மக்களில் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகுதான் கொரோனா பரவலின் தாக்கம் குறையும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்னமும் மக்கள் வீட்டிற்குள் அடங்கிக் கிடக்காமல் கடைகளுக்குச் செல்கிறோம் என்று சொல்லி காலை 10 மணி வரை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இபப்போதுள்ள சூழலில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்தாலும் எப்படியும் இரண்டு, மூன்று மாதங்கள் வரை ஆகும் என்றே சொல்கிறார்கள். அப்படி குறைந்தாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் தியேட்டர்களை நிச்சயம் திறக்க மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி அங்கு தசரா பண்டிகை வரும் அக்டோபர் மாதத்தில் வேண்டுமானால் தியேட்டர்களைத் திறக்கலாம் என்கிறார்கள். இல்லை கடந்த வருடம் போலவே தீபாவளி சமயத்தில் வேண்டுமானால் தியேட்டர்களைத் திறந்தாலும் திறக்க வாய்ப்புள்ளது. அதுகொரோனா குறைவதைப் பொறுத்தே உள்ளது.