பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனா ஊரடங்கின் இரண்டாம் அலை விஸ்வரூபமெடுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு என்பதே இல்லாமல் இருக்கிறது. கடந்த வருடம் கொரோனா தாக்கத்தின் போது ஓடிடி தளங்கள் அவர்களுக்கு அதிகம் அறிமுகமாகின. பார்க்காத படங்களையும் கடந்த வருட ஊரடங்கின் போது பார்த்துத் தள்ளிவிட்டார்கள்.
ஆனால், இந்த வருடத்திய ஊரடங்கில் அவர்களால் புதிய படங்களைப் பார்க்க முடியவில்லை. வேறு மொழிகளில் வந்து சில படங்களை மட்டும் ஓடிடி தளங்களில் தீவிர சினிமா ரசிகர்கள் சிலர் பார்த்தார்கள். இருந்தாலும் பெரும்பாலான சினிமா ரசிகர்களை இந்த வருடம் ஓடிடி தளங்கள் இன்னும் கண்டுகொள்ளவே இல்லை.
இந்த இரண்டாவது அலையின் தாக்கம் திடீரென வந்ததால் அவர்களால் சுதாரித்துக் கொள்ளவும் வாய்ப்பில்லை. இப்போதுதான் பல நிறுவனங்கள் புதிய படங்களை வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். அவை முடிந்து ஒப்பந்தம் போட்டு, அதன்பின்தான் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக வேண்டும்.
எப்படியும் ஜுன் மாதத்தில் சில புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக ஜுன் மாதம் வரையில் தான் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அப்படியே இருந்தாலும் தியேட்டர்களைத் திறக்க மேலும் சில மாதங்கள் ஆகலாம். அதற்குள் புதிய படங்களை வெளியிட்டால்தான் ஓடிடி தளங்களும் தாக்குப் பிடிக்க முடியும் என்பது உண்மை.