பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவருக்கும் கவுதம் கிச்லு என்பவருக்கும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30ம் தேதி மும்பையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
காஜல் அகர்வாலின் திருமணம் முடிந்த மறுநாள், நடிகை அனுஷ்கா, காஜலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். “இந்த பூமியில் அதிகபட்ச மகிழ்ச்சி என்பது திருமணத்தின் மகிழ்ச்சிதான். இரண்டு மனங்கள் ஒரே எண்ணங்களுடன், இரண்டு இதயங்கள் ஒரே அசைவுடன்... காஜல், கவுதம் இருவருக்கும் மகிழ்ச்சியான திருமண நல்வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அந்த திருமண வாழ்த்திற்கு சுமார் ஆறு மாத காலம் கழித்து 'ஹார்ட்டின்' மட்டும் பதிவிட்டு பதிலளித்துள்ளார் காஜல். “குழந்தை பெற்ற பிறகு எதற்குப் பதிலளிக்க வேண்டும்,” என ஒரு ரசிகர் அதற்கு கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார்.
அனுஷ்காவின் டுவீட்டை இப்போது தான் காஜல் அகர்வால் பார்த்துள்ளாரா அல்லது பதிலளிக்க மறந்துவிட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், எந்த கமெண்ட்டுகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. காஜலின் பதிலுக்கும் அனுஷ்கா வேறு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.




