பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கோமாளி படம் ஜெயம்ரவிக்கு வெற்றியை கொடுத்தாலும் அவரது 25வது படமான பூமி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஓடிடி தளத்திற்கு விற்று தயாரிப்பாளர் தப்பித்துக் கொண்டாலும் விமர்சன ரீதியாக படம் உரிய வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் அவர் இயக்குனர் அஹமத் இயக்கும் ஜனகனமன படத்தில் நடிப்பதாக இருந்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த படத்தின் கதை களம் நான்கைந்து வெளிநாடுகளில் நடப்பது போன்று உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக இன்னும் ஒரு வருடத்திற்காவது படப்படிப்புக்கு திட்டமிடப்படடிருக்கும் நாடுகளில் அனுமதி கிடைப்பது சிரமம் என்பதால் அஹமத் இயக்கத்திலேயே இன்னொரு கதையில், அதாவது தமிழ்நாட்டிலேயே படப்பிடிப்பு நடத்துகிற மாதிரியான கதை களம் கொண்ட படத்தில் நடிக்க ஜெயம் ரவி திட்டமிட்டிருக்கிறார்.
மீடியம் பட்ஜெட்டில் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒருவேளை தியேட்டர்கள் திறக்கப்படாவிட்டாலும் ஓடிடியில் வெளியிடும் வகையில் இந்த படம் தயாராக இருக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரையில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவரும்.
இதற்கிடையில் ஜெயம்ரவி நடித்து வரும் பொன்னியின் செல்வன் படமும் முடங்கி கிடப்பது குறிப்பிடத்தக்கது. அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல், பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் ஆகியோரிடம் கதை கேட்டு ஓகே சொல்லி வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.