பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. கன்னட பிக்பாசில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி படங்களில் நடித்தார்.
சம்யுக்தா பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்யுக்தாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. "என் பெற்றோர்கள் தான் எனக்கு உலகம் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள்" என்று உருக்மான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதோடு பெற்றோர்கள் முதியவர்கள் என்பதால் அவர்களை மருத்துவமனையில் சேர்க்காமல் டாக்டர்களின் ஆலோசனையின்படி வீட்டிலேயே அவர்களை தனிப்படுத்தி வைத்து கவனித்து வந்தார். பெற்றோர்கள் குணமாகி வரும் நிலையில் சம்யுக்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; உங்களின் பிரார்த்தனைகளால் எனது பெற்றோர் நலம் பெற்று வருகிறார்கள். டாக்டர்கள் ஆலோசனைப்படி எனக்கு பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. நானும் அதனை பாசிட்டிவாகவே எடுத்துக் கொண்டேன்.
என் பெற்றோர்கள் குணமடைந்ததே எனக்கு புதிய உலகத்தில் பிரவேசிப்பது போல இருந்தது. நானும் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பி வருவேன். என்று கூறியிருக்கிறார். சம்யுக்தாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டி வருகிறார்கள்.