தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாலிவுட் நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டதில் இருந்தே ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். அவரது அந்த உதவி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்தவகையில், கொரோனா இரண்டாவது அலையின்போது பலருக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வரும் சோனு சூட், சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசரமாக தேவைப்படுகிறது என்கிற தகவல் தனக்கு கிடைத்ததும் உடனடியாக அனுப்பி வைத்து 30 உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் ரீமா சுவர்ணா மற்றும் சிகிச்சை கொடுத்த மருத்துவமனை நிர்வாகமும் சரியான நேரத்தில் உதவி செய்து 30 பேரை காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.