தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த வருட கொரோனா தொற்றின் முதல் அலை ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாவது அலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
கடந்த வருட கொரோனாவிற்கே தியேட்டர்களை சுமார் 8 மாதங்கள் வரை மூடி வைத்திருந்தார்கள். இந்த இரண்டாவது அலையில் கடந்த 20 நாட்களாக தியேட்டர்களை மூடி வைத்திருக்கிறார்கள். இந்த அலையின் தாக்கம் ஜுலை வரையிலும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
அதன்பிறகு கொரோனா தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் தான் அதற்கடுத்த சில மாதங்களிலாவது தியேட்டர்களைத் திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். ஏற்கெனவே கடந்த வருடம் 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டாலும் ஓரிரு படங்கள் மட்டும் தான் லாபத்தைத் தந்தன.
பல தியேட்டர்களை திறக்காமலேயே வைத்திருந்தார்கள். இந்த வருடமும் அப்படிய நீடித்தால் நூற்றுக்கணக்கான தியேட்டர்களை நிரந்தரமாக மூடும் அபாயம் இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாவும் சினிமா தொழிலையும், தியேட்டர்களையும் நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
முதல் அலையின் போதே மீள முடியாத தியேட்டர்கள் இந்த இரண்டாவது அலையில் மீள்வது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் நிதர்சனமான உண்மை.