துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு |
அமீர் இயக்கத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் பருத்திவீரன். இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. பொன்வண்ணன், சரவணன் கஞ்சா கருப்பு, உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இவர்கள் தவிர மண்சார்ந்த பல புதிய முகங்களும் நடித்தார்கள். கார்த்தியின் அப்பத்தாவாக நடித்தவர் பஞ்சவர்ணம். கிராமிய பாடகியாகவும், கலைக்குழு கலைஞராகவும் இருந்தவர். பருத்திவீரன் படத்திற்கு பிறகு மேலும் சில படங்களில் நடித்தார்.
74 வயதான பஞ்சவர்ணம் முதுமை காரணமாக நேற்று காலமானார். அவருக்கு நடிகர் கார்த்தி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.