ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறவர் பாலசரவணன். குட்டிப்புலி படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், கொடிவீரன், உள்குத்து, ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மதுரையில் வசித்து வந்த இவரின் தங்கையின் கணவர் இருதினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாலசரவணன் டுவிட்டரில், ‛‛அன்பு நண்பர்களே. எனது தங்கையின் கணவர் கரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவு கூர்ந்து மிகக் கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். தயவு செய்து முக கவசம் அணியுங்கள்'' என தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.