பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறவர் பாலசரவணன். குட்டிப்புலி படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், கொடிவீரன், உள்குத்து, ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மதுரையில் வசித்து வந்த இவரின் தங்கையின் கணவர் இருதினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாலசரவணன் டுவிட்டரில், ‛‛அன்பு நண்பர்களே. எனது தங்கையின் கணவர் கரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவு கூர்ந்து மிகக் கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். தயவு செய்து முக கவசம் அணியுங்கள்'' என தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.