டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கமலை வைத்து இந்தியன்-2 படத்தை ஆரம்பித்த இயக்குனர் ஷங்கர், தற்போது அந்தப்படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஷங்கர் படங்களில் வில்லன் கதாபாத்திரம் எப்போதுமே பவர்புல்லாக இருக்கும். அந்தவகையில் ராம்சரண் படத்தில் கன்னட ஹீரோ சுதீப்பை வில்லனாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஐ படத்தில் சுரேஷ்கோபி, 2.O படத்தில் அக்சய் குமார் என மற்ற மொழிகளில் ஹீரோக்களாக நடித்து வருபவர்களை அழைத்து வந்து வில்லனாக்கும் ஒரு சென்டிமென்ட்டை தொடர்ந்து வருகிறார் ஷங்கர். தவிர ஷங்கர் படத்தில் நடிக்க அனைத்து நடிகர்களுமே ஆர்வம் காட்டவே செய்வார்கள். அந்தவகையில் சுதீப்பும் ஷங்கர் சென்டிமென்ட்டில் சிக்குவார் என்றே தெரிகிறது.




