மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கமலை வைத்து இந்தியன்-2 படத்தை ஆரம்பித்த இயக்குனர் ஷங்கர், தற்போது அந்தப்படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஷங்கர் படங்களில் வில்லன் கதாபாத்திரம் எப்போதுமே பவர்புல்லாக இருக்கும். அந்தவகையில் ராம்சரண் படத்தில் கன்னட ஹீரோ சுதீப்பை வில்லனாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஐ படத்தில் சுரேஷ்கோபி, 2.O படத்தில் அக்சய் குமார் என மற்ற மொழிகளில் ஹீரோக்களாக நடித்து வருபவர்களை அழைத்து வந்து வில்லனாக்கும் ஒரு சென்டிமென்ட்டை தொடர்ந்து வருகிறார் ஷங்கர். தவிர ஷங்கர் படத்தில் நடிக்க அனைத்து நடிகர்களுமே ஆர்வம் காட்டவே செய்வார்கள். அந்தவகையில் சுதீப்பும் ஷங்கர் சென்டிமென்ட்டில் சிக்குவார் என்றே தெரிகிறது.