பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் படம் புஷ்பா. செம்மர கடத்தலின் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். முக்கிய வேடத்தில் பஹத் பாசில் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்ததால் அவர் தற்சமயம் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஒய்வு எடுக்கிறார்.
ஆனாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.. காரணம் பஹத் பாசில் கொடுத்த தேதிகளை வீணாக்க விரும்பாத தயாரிப்பு நிறுவனம், அல்லு அர்ஜுனுடம் காம்பினேஷன் இல்லாத, அதேசமயம் பஹத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைந்து படமாக்கிவிட விரும்பியது..
ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும்போது படபிடிப்பை அவசியம் நடத்தத்தான், வேண்டுமா என சோஷியல் மீடியாவில் சர்ச்சை எழுந்தது, இதனை தொடர்ந்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது புஷ்பா படக்குழு. இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் ரிலீஸாக உள்ளது.