'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் நேற்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திரையுலகமும் ரசிகர்களும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், அவருடன் நெருங்கி பழகியவர்களும் பணியாற்றியவர்களும் அவருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் கே.வி.ஆனந்த்தை மலையாளத்தில் தனது 'தென்மாவின் கொம்பத்து' என்கிற படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பிரியதர்ஷன். தற்போது கே.வி.ஆனந்த் குறித்த நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரியதர்ஷன்.
“நான் இயக்கிய கோபுர வாசலிலே படத்தில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பணியாற்றியபோது அவரது சீடர்களான ஜீவா மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோர் அதில் உதவியாளர்களாக வேலை பார்த்தனர். அடுத்ததாக நான் 'தென்மாவின் கொம்பத்து' படத்தை இயக்க முடிவு செய்தபோது, பி.சி.ஸ்ரீராம் மணிரத்னம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதில் பிஸியாக இருந்தார். அதனால், “உங்களுக்கு இன்னொரு திறமையான ஆளை தருகிறேன்” என கூறி கே.வி.ஆனந்தை அனுப்பி வைத்தார்.
தனது முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவுக்காக தேசிய விருது வாங்கித்தந்து, அவரது குருவை மட்டுமல்ல, என்னையும் கவுரப்படுத்தி விட்டார் கே.வி.ஆனந்த். அந்த சமயத்தில் வெளியான சினிமாஸ்கோப் படங்களில் முதல் நபராக தேசிய விருது வாங்கியவர் அவர் தான். பாலுமகேந்திரா அந்தப்படத்தை பார்த்துவிட்டு, அவ்வளவு அற்புதமான ஒளிப்பதிவை அதற்கு முன் பார்த்ததில்லை என பரவசப்பட்டார்.
அதன்பின் மலையாளம், இந்தி என அவருடன் திரைப்படங்கள் மற்றும் விளம்பர படங்களிலும் பணிபுரிந்துள்ளேன். எனக்கு அவருக்கும் அருமையான பிணைப்பு இருந்தது. ஒரு சகோதரராக, வழிகாட்டியாக என்மீது அவர் மரியாதை செலுத்தி வந்தார். காப்பான் பட இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் அழைத்தபோது சில காரணங்களால் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனது. எப்போதும் அமைதியாகவும் புன்னகை ததும்பும் முகத்துடன் காட்சியளிக்கும் அப்படி ஒரு ஒளிப்பதிவாளரை நீங்கள் வேறெங்கும் எப்போதும் பார்க்க முடியாது” என உருக்கமாக கூறியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்..