வரிசையாக சரியும் வசூல் நிலவரம் : கூட்டுக்குழு அமைக்கப்படுமா? கூடி பேசுவார்களா? | ஆளே மாறிய அயோத்தி ப்ரீத்தி அஸ்ராணி | ஹீரோயின் இல்லை, அர்த்தமுள்ள கேரக்டரில் பிந்துமாதவி | சென்ட் பிசினஸில் இறங்கிய ராஷ்மிகா மந்தனா | கூலி: அமெரிக்கா டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் | குடும்பப் படங்களுக்கான வரவேற்பு: மீண்டும் நிரூபிக்குமா இந்த வாரப் படங்கள் | சூர்யாவுக்கு 50, தனுஷிற்கு 42 : சுடச்சுட வெளியாகும் புது அறிவிப்புகள் | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' - பின்னணி இசை தாமதம்? | மாரீசன் படத்தை பேசாத வடிவேலு, பஹத் | “ஹிந்தி திரிஷ்யம் 3 தயாரிப்பு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்தனர்” : ஜீத்து ஜோசப் |
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார். சில படங்களில் நடித்தும், படங்கள் தயாரித்தும் உள்ளார். சமீபத்தில் பா.ஜ., கட்சியில் இணைந்து, தேர்தல் சமயங்களில் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ராம்குமார் வெளியிட்ட அறிக்கை : நடிகர் திலகத்தின் ஆசியுடனும், இறைவன் அருளுடனும் பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேன். என்னுடன் பிரச்சாரத்தில் உடனிருந்து உதவிய நடிகர் திலகத்தின் இதயங்கள், நண்பர்களுக்கு நன்றி. கொரோனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவ தொடங்கி உள்ளது. மக்கள் அனைவரும் முக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.
இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21 நடிகர் திலகத்தின் நினைவுதினத்தையொட்டி இந்தாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் விரைவில் தெரிவிக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.