மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார். சில படங்களில் நடித்தும், படங்கள் தயாரித்தும் உள்ளார். சமீபத்தில் பா.ஜ., கட்சியில் இணைந்து, தேர்தல் சமயங்களில் அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ராம்குமார் வெளியிட்ட அறிக்கை : நடிகர் திலகத்தின் ஆசியுடனும், இறைவன் அருளுடனும் பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தேன். என்னுடன் பிரச்சாரத்தில் உடனிருந்து உதவிய நடிகர் திலகத்தின் இதயங்கள், நண்பர்களுக்கு நன்றி. கொரோனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவ தொடங்கி உள்ளது. மக்கள் அனைவரும் முக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.
இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜூலை 21 நடிகர் திலகத்தின் நினைவுதினத்தையொட்டி இந்தாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் விரைவில் தெரிவிக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.