100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
விக்ரம் நடிப்பில் தான் இயக்கிய அந்நியன் படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்கிறார் ஷங்கர். ஆனால் இந்த தகவலை அவர் வெளியிட்ட போது அந்நியன் படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன, அந்நியன் படத்தின் கதைக்கான முழு உரிமையை எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து தான் வாங்கியிருப்பதாக தெரிவித்தவர், அந்நியன் ரீமேக் செய்யும் உரிமை ஷங்கருக்கு இல்லை என ஒரு கடிதம் வாயிலாக தெரிவித்தார்.
அதையடுத்து டைரக்டர் ஷங்கர், அந்நியன் படத்திற்கு சுஜாதா வசனம் மட்டுமே எழுதினார். அதனால் படக்கதையின் முழு உரிமை எனக்கு மட்டுமே உள்ளது என்று தனது சார்பில் ஒரு விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் இந்த பிரச்சினையை தற்போது தான் உறுப்பினராக இருக்கும், செளத் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்க்கு கொண்டு சென்றுள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதையடுத்து ஷங்கருக்கு இதுகுறித்த விளக்கம் கேட்டு கடிதம் எழுத முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.