ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
கடந்த 2005ல் ஷங்கர், விக்ரம் கூட்டணியில் வெளியான படம் அந்நியன். மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் பின்னணியில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தை ஷங்கர் துவங்கியபோது சில காரணங்களால் அந்த படம் தடைபட்டது. இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் அந்நியன் படத்தின் ரீமேக்கை அவர் இயக்கப் போகிறார் என்றும் அதில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. அதன் பிறகு எதிர்பாராத விதமாக ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை துவங்கிய ஷங்கர் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பையும் துவங்கி பிஸியாகி விட்டார். இதனால் அந்நியன் ரீமேக் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் ஹிந்தியிலும் வெளியானது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விக்ரமிடம் அந்நியன் படத்தின் ரீமேக் குறித்தும் கேட்கப்பட்டது. இது குறித்து பதில் அளித்த விக்ரம், “இது பற்றி நீங்கள் இயக்குனர் ஷங்கரிடம் தான் கேட்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் என்னை வைத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்க வேண்டும்” என்று தன் மனதில் மறைந்திருந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
அது மட்டுமல்ல இந்த படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு ரன்வீர் சிங் தகுதியான நபர் தான் என்றும் அப்படி அவர் நடித்திருந்தால் என்னைவிட இந்த படத்திற்கு சில விஷயங்களை சிறப்பாக சேர்த்திருப்பார் என்றும் அதை பார்ப்பதற்கு ஆவலாக இருந்தேன் என்றும் கூறியுள்ளார் விக்ரம்.