Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல்

09 ஏப், 2025 - 10:48 IST
எழுத்தின் அளவு:
I-have-no-rights-in-my-mothers-house-Ramkumar-files-affidavit

நடிகர் திலகம் சிவாஜியின் பாரம்பரிய சென்னை வீடான 'அன்னை இல்லம்' இப்போது நீதிமன்ற வழக்கு, ஜப்தி உத்தரவு என சிக்கல்களை சந்தித்து வருவது சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் கவலையை உண்டாக்கி வருகிறது.

சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், ஈசன் புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு கம்பெனி தொடங்கி 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிக்க வாங்கிய 3 கோடி ரூபாய் கடன் தற்போது 9 கோடியாக வளர்ந்து நிற்கிறது. கடன் கொடுத்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சிவாஜி கணேசனின், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

'அன்னை இல்லம் எனக்கு சொந்தமானது. எனது தந்தை அதை எனக்கு எழுதி வைத்துவிட்டார். அதற்கு சகோதர சகோதரிகளும் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அதனால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று பிரபு மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ராம்குமாரின் கடனை தன்னால் அடைக்க முடியாது என்று பிரபு தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல, அன்னை இல்லத்தில் தனக்கு பங்கு எதுவும் இல்லை என்று ராம்குமார் தரப்பிலும் கூறப்பட்டது. இதையடுத்து, அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று பிரமாண மனுவை தாக்கல் செய்ய ராம்குமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்குமார் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பத்திரத்தில் “அன்னை இல்லத்தை எனது தம்பி பிரபுவுக்கு, என் தந்தை சிவாஜி கணேசன் எழுதி வைத்து விட்டார். அந்த வீட்டின் மீது எனக்கு எந்த பங்கும், உரிமையும் கிடையாது. எதிர்காலத்திலும், இந்த சொத்தின் மீது உரிமை கோர மாட்டேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து வழக்கை வருகிற 15ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன்'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை ... பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in