Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள்

09 ஏப், 2025 - 12:07 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-writers-who-searched-for-Chandralekha

இந்திய சினிமாவின் முதல் மெகா பட்ஜெட் படம் 'சந்திரலேகா'. தமிழ், இந்தியில் தயாரான படம் பல விதங்களில் சாதனை படைத்தது. ஆனால் இந்த படத்தின் கதை உருவான விதம் சுவாரஸ்யமானது.

1943ம் ஆண்டு 'மங்கம்மா சபதத்தை'யும் 1944ம் ஆண்டு 'பாலநாகம்மா' படத்தையும் தயாரித்தார் எஸ்.எஸ்.வாசன். பெண்ணை மையப்படுத்திய இந்த படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு அந்தக் காலத்திலேயே லட்சக்கணக்கில் வசூல் செய்த படங்கள்.

இதனால் தனது அடுத்த படமும் பெண்ணை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்று நினைத்த வாசன், தனது கதை இலாகாவை அழைத்து ஆலோசனை நடத்தினார். பெரிய வீரமிக்க பெண்ணாக இருக்க வேண்டும், ஆணால் செய்ய முடியாத காரியங்களை செய்பவளாக இருக்க வேண்டும். வீரம், அன்பு, ஆணவம், வெறி இப்படி எல்லா குணங்களும் கொண்டவளாக கதை நாயகி இருக்க வேண்டும் அதற்கேற்ப கதையை தயார் செய்யுங்கள் என்று கூறிய அவர் எனது அடுத்து நாயகி 'சந்திரலேகா', அவளின் கதையை எழுதி வாருங்கள் என்றார். 'சந்திரலேகா' என்று விளம்பரமும் செய்தார்.

அதாவது கதை ரெடியாவதற்கு முன்பே படத்தின் தலைப்பை அறிவித்தார் வாசன். வாசனின் கதை இலாகாவில் இருந்த கொத்தமங்கலம் சுப்பு, கி.ரா. சங்கு சுப்பிரமணியம், வேப்பத்தூர் கிட்டு போன்ற ஜெமினி எழுத்தாளர்கள்தான் 'மங்கம்மா சபதம்' மற்றும் 'பாலநாகம்மா' கதையை எழுதியவர்கள். அவர்களே சந்திரலேகா கதையையும் தேடினார்கள். ஆனால் மாதங்கள் பல ஆகியும் அவர்களால் கதையை எழுத முடியவில்லை. இதனால் மனம் வெறுத்த வாசன், அடுத்து 'அவ்வையார் 'படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும், வேப்பத்தூர் கிட்டு ஒரு வாரம் அவகாசம் கேட்டார், வாசனும் ஒப்புக் கொண்டார்.

கதையை தேடி அலைந்த கிட்டுவின் கண்களில் ஜி.டபிள்யூ.எம். ரெனால்ட்ஸ் எழுதிய 'தி மேல் பண்டிட்' என்ற நாவல் பட்டது. அது கொடூரமான கொள்ளைக்காரர்களை தீரமாக எதிர்த்து போராடிய ஒரு பெண்ணை பற்றியது. அந்த நாவலின் சாரம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஜெமினி கதை இலாகா உருவாக்கியதுதான் 'சந்திரலேகா' கதை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அன்னை இல்லத்தில்  எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல்அன்னை இல்லத்தில் எனக்கு எந்த ... பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in