'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் இலங்கையில் போராட்டம் நடத்தி வந்த விடுதலைபுலிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது மூத்த மகனுக்கு பிரபாகரன் என்றே பெயர் வைத்தார். அவரது படங்களில் விடுதலை புலிகளை ஆதரித்து வசனம் பேசினார்.
இந்த நிலையில் அவர் நடித்த படம் 'இது எங்க பூமி'. 1984ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் விஜயகாந்தும், பிருந்தா என்ற புதுமுகமும் நடித்தனர். இந்த படத்திற்கு பிறகு பிருந்தா என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஜெய்சங்கர், ஜெயமாலினி, நிழல்கள் ரவி, வினு சக்ரவர்த்தி, சசிகலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். அதிரடி படங்களுக்கு பெயர் பெற்ற கர்ணன் இந்த படத்தை இயக்கினார், கலைத்தோட்டம் கிரியேஷன் சார்பில் எம்.சூர்ய நாராயணன் தயாரித்தார். சங்கர்&- கணேஷ் இசை அமைத்தனர்.
அநீதியை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதை. படத்திற்கு முதலில் 'விடுதலைபுலிகள்' என்றே தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இலங்கை தூதரகம் இந்திய தணிக்கை குழுவிற்கு படத்தை தலைப்பை மாற்ற வேண்டுகோள் விடுத்தது. அதோடு படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ராமகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து படத்தின் தலைப்பு 'இது எங்க பூமி' என்று வைக்கப்பட்டது.