ஆக., 22ல் ரீ-ரிலீஸாகும் 'கேப்டன் பிரபாகரன்' | மம்முட்டி, பவன் கல்யாண் வரலாற்று படங்களின் இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரே போல நடந்த சோகம் | செல்போனை பறித்தாரா அக்ஷய் குமார் ? உண்மையை வெளியிட்ட லண்டன் ரசிகர் | 'டகோய்ட்' படப்பிடிப்பில் ஆத்வி சேஷ்-மிருணாள் தாக்கூர் காயம் | ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | ரஜினியின் 'கூலி': அமெரிக்காவில் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன! | மாரீசன் பற்றி மனம் திறந்த பஹத் பாசில் | திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் |
நீண்ட நாட்கள் ஓடி சாதனை படைத்த சீரியல் 'சந்திரலேகா'. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரானது 2254 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த தொடரில் ஸ்வேதா பண்டேகர், நாகஸ்ரீ, சந்தியா ஜகர்லமுடி மற்றும் ராணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்தனை வருட காலக்கட்டத்தில் பல நடிகர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 2014ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் க்ளைமாக்ஸ் எபிசோடு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கேற்றார்போல் ராதிகா ப்ரீத்தி நடிக்கும் புதிய சீரியல் ஒன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சந்திரலேகா தொடர் விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டு அதன் இடத்தை அந்த புது சீரியல் பிடிக்கும் எனவும் சின்னத்திரை வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. இதனால், இந்த தொடரின் முக்கிய ரசிகர்களான இல்லத்தரசிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.