தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என பெயர் எடுத்து வாழ்ந்து, மறைந்தவர் சிவாஜி கணேசன். இவரது மகன்களான ராம்குமார் (நடிகர், தயாரிப்பாளர்), பிரபு(நடிகர்), இவர்களின் வாரிசுகளான துஷ்யந்த் (நடிகர், தயாரிப்பாளர்), விக்ரம் பிரபு(நடிகர்) ஆகியோரும் சினிமாவில் பயணித்து வருகின்றனர்.
ராம் குமாரின் மகனான துஷ்யந்த், ‛ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிக்க, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3.74 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதில் மத்தியஸ்தராக நீதிபதி ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். அசல் மற்றும் வட்டி உடன் சேர்ந்து ரூ.9.39 கோடியை திருப்பி செலுத்த துஷ்யந்த்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்கவும் துஷ்யந்திற்கு காலஅவகாசம் வழங்கியிருந்தது. ஆனால் துஷ்யந்த் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி துஷ்யந்தின் அப்பாவும், நடிகர் சிவாஜியின் மகனுமான ராம்குமார், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் திநகரில் உள்ள சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தமானது. அந்த வீட்டில் எனக்கு எந்த பங்கும் இல்லை. ஆகவே இந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.