ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
கன்னடத்தில் சில படங்களில் நடித்திருப்பவர் ரன்யா ராவ். இவர் தமிழில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த வாகா என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் கடந்த 2016ம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த நிலையில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா ராவை துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்துள்ளார்கள். தனது பெல்ட்டில் 14 கிலோ தங்க கட்டிகள், 800 கிராம் தங்க நகைகளை அவர் பதுக்கி வைத்துள்ளார். அதோடு ரன்யா ராவ் கர்நாடகத்தைச் சேர்ந்த டிஜிபி ராமச்சந்திர ராவ் என்பவரின் மகள் ஆவார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் ரன்யாராவ் டிஜிபியின் மகள் என்பதால் அவருக்கு வழக்கமான சோதனைகள் மட்டுமே கடந்த காலங்களில் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து இது போன்ற தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்த அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதின் பேரிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.