1700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' | 'லடாக்' படப்பிடிப்பில் சல்மான்கானின் காயம் ; படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம் | செப்டம்பர் 26ல் மீண்டும் இத்தனை படங்கள் வெளியீடா? | கவுதம் கார்த்திக்கின் 'ரூட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு | இப்போதைக்கு ஓடிடியில் லோகா ஒளிபரப்பாகாது ; துல்கர் சல்மான் திட்டவட்டம் | மூணாறு படப்பிடிப்பில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஜீப் விபத்தில் காயம் | பத்மஸ்ரீ விருதை விட சல்மான்கான் படத்தை இயக்கியது தான் பெரிய சாதனை ; பிரியதர்ஷன் | சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு |
கன்னடத்தில் சில படங்களில் நடித்திருப்பவர் ரன்யா ராவ். இவர் தமிழில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த வாகா என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் கடந்த 2016ம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த நிலையில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா ராவை துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்துள்ளார்கள். தனது பெல்ட்டில் 14 கிலோ தங்க கட்டிகள், 800 கிராம் தங்க நகைகளை அவர் பதுக்கி வைத்துள்ளார். அதோடு ரன்யா ராவ் கர்நாடகத்தைச் சேர்ந்த டிஜிபி ராமச்சந்திர ராவ் என்பவரின் மகள் ஆவார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் ரன்யாராவ் டிஜிபியின் மகள் என்பதால் அவருக்கு வழக்கமான சோதனைகள் மட்டுமே கடந்த காலங்களில் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து இது போன்ற தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்த அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதின் பேரிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.