படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகையாக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த சமந்தா. அதிகமான தெலுங்குப் படங்களில் நடித்ததால் ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார்.
கதாநாயகியாக தமிழில் சமந்தாவின் முதல் படம் 'பாணா காத்தாடி'. ஆனால், அப்படம் வெளிவருவதற்கு முன்பே தமிழில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளிவந்தது. தெலுங்கில் அதே படம் 'ஏ மாய சேசவே' என உருவானது. அதில் த்ரிஷா கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடித்தவர் சமந்தா.
படம் வெளிவந்து 15 ஆண்டுகள் கடந்த பின்பும் அப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார் சமந்தா. சமீபத்திய பேட்டி ஒன்றில், “ஏ மாய சேசவே' படத்தில் கார்த்திக்கை கேட் பக்கம் நான் சந்திப்பதுதான் முதலில் படமான காட்சி. அப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அணுஅணுவாக என்னால் மீண்டும் யோசிக்க முடியும். கவுதம் மேனனுடன் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம். கதாபாத்திரம் என்ன செய்ய வேண்டும், அதை எப்படி நம்மிடமிருந்து வாங்க முடியும் என்பதை அறிந்தவர் கவுதம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் படமாயிற்றே, எப்படி மறக்க முடியும் ?. அது மட்டுமல்ல அப்படத்தில் சமந்தா காதலித்த நாக சைதன்யாவையே நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் பிரிந்தும் விட்டார். நிழலில் மறக்க முடியாத காதல் அனுபவம், நிஜத்தில் மறக்க நினைக்கும் காதல் அனுபவம். யாருக்கும் இப்படி அமையக் கூடாது.