மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்(86), கொரோனா அறிகுறி உடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குனர்களே கமர்ஷியலாக தொடர்ந்து படங்கள் இயக்கி, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலம் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய இவர், சிவாஜி, ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரை வைத்துபடங்களை இயக்கி உள்ளார். இதுவரை 72 படங்களை இயக்கியுள்ளார். இதில் ரஜினியை வைத்து மட்டும் 25 படங்களை இயக்கி, அவற்றை பெரும்பாலும் வெற்றி படங்களாக கொடுத்துள்ளார் உள்ளார்.
ரஜினியின் சினிமா பயணத்தில் எஸ்.பி.முத்துராமனின் பங்கு இன்றியாமையாதது. கடைசியாக தொட்டில் குழந்தை என்ற படத்தை இயக்கினார். அதன்பின் படங்களை இயக்கவில்லை. சினிமா தொடர்பான நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொண்டு வந்தார்.
இந்நிலையில் 86 வயதை கடந்துவிட்ட எஸ்.பி.முத்துராமனுக்கு நேற்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. தற்போது அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை : ‛‛கொரோனா அறிகுறிகளுடன் எங்களது மருத்துவமனையில் எஸ்.பி.முத்துராமன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.




