எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கடந்த 25 வருடங்களுக்கு முன், மலையாளத்தில் 'டாடி' மற்றும் 'தேவராகம்' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார் அரவிந்த்சாமி. இந்தநிலையில் தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும், 'ஓட்டு' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இந்தப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழி படமாக தயாராக இருக்கிறது.
இந்த படத்தை பெலினி என்பவர் இயக்குகிறார் இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த தீவண்டி என்கிற வெற்றி படத்தை இயக்கியவர். இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தின் நாயகியாக தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், இந்தப்படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த மாத இறுதியில் கோவாவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.