புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
மலையாளத்தில் த்ரிஷ்யம்-2 வெற்றி பெற்ற கையோடு, தெலுங்கிலும் அதன் ரீமேக்கை துவங்கிவிட்டார்கள். தெலுங்கில் முதல் பாகத்தை இயக்கிய நடிகை ஸ்ரீப்ரியா, தற்போது தேர்தல் களத்தில் பிஸியாகி விட்டதால், இந்தமுறை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இந்தப்படத்தை இயக்குகிறார். வெங்கடேஷ், மீனா, நதியா, எஸ்தர் அனில் என முதல் பாகத்தில் இருந்தவர்கள் அப்படியே இதிலும் தொடர்கிறார்கள்.
ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில், படம் முழுதும் வருகின்ற, மலையாளத்தில் முரளிகோபி என்பவர் நடித்திருந்த, ஸ்ட்ரிக்ட்டான ஐஜி கதாபாத்திரத்தில், நடிகர் ராணா நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என அவர் மறுத்துவிட்டார்.
இந்தநிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில், வில்லன் நடிகர் சம்பத் நடித்து வருகிறார். த்ரிஷ்யம்-2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வரும் சம்பத், தற்போது படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை, இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிட்டு, இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.