துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கடந்த வருடம் வெளியான 'அல வைகுந்தபுரம்லோ' படத்தின் மூலம் இளைஞர்களை கிறங்கடித்த பூஜா ஹெக்டே, குறிப்பாக அதில் இடம்பெற்ற 'புட்டபொம்மா' பாடலின் மூலம் குழந்தைகளையும் கவர்ந்தார். அந்தப்படத்தில் அவர் அணிந்து நடித்திருந்த உடைகள் எல்லாமே அவரை மேலும் அழகாக்கி காட்டின. இந்த உடைகள் குறித்தும், அல வைகுண்டபுரம்லோ படக்குழுவினரிடம் இருந்து, தன்னை தேடிவந்த எதிர்பாராத பரிசு குறித்தும் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.
“இந்தப்படத்தில் நடித்தபோது என்னுடைய உடைகள் அனைத்தையும் ஒரு பெட்டியிலேயே வைத்து பொக்கிஷமாக பாதுகாத்து வந்தனர். நான் அந்த உடைகளை விரும்பி அணிந்தாலும், அவற்றில் ஒன்றைக்கூட எனது வீட்டிற்கு எடுத்து செல்லவில்லை. ஆனால் இந்தப்படத்தில் நான் பயன்படுத்திய சைக்கிள் மீது மட்டும் எனக்கு ரொம்பவே ஒட்டுதல் ஏற்பட்டது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட படக்குழுவினர், படப்பிடிப்பு முடிந்து நான் மும்பை சென்ற சில நாட்களிலேயே, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலமாக அந்த சைக்கிளை எனக்கே அனுப்பி வைத்துவிட்டனர். அந்தப்படத்தில் பணியாற்றியதன் ஞாபகார்த்தமாக இப்போது என் வீட்டை அலங்கரிக்கிறது அந்த சைக்கிள்” என கூறியுள்ளார் பூஜா ஹெக்டே..