முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா |
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்த 'டெடி' படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் குழந்தைகளும் ரசிக்கும் படமாக இருப்பதாலும், ஓடிடியில் வெளியானதாலும் படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
இப்படத்தில் ஒரு 'டெடி' பொம்மைதான் டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நடக்கவும், பேசவும் செய்யும் அந்த பொம்மை கதாபாத்திரத்தில் கோகுல் என்பவர் தான் நடித்துள்ளார். ஆனால், பொம்மையின் தலை மட்டும் கிராபிக்ஸ் மூலம் வடிவமைத்து படத்தை எடுத்துள்ளார்கள்.
படம் வெளியாகிய ஒரு வாரத்திற்குள் அந்த பொம்மையாக நடித்த கோகுலை மறக்காமல் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.
“காட்சிகளின் பின்னால் இருக்கும் மனிதர் இவர் தான் மிஸ்டர் கோகுல், நாடக நடிகர். பொம்மைக்குரிய ஆடையை அணிந்து அந்த டெடியின் உடல் மொழியை வெளிப்படுத்தியவர். தலை மட்டும் 3டி முறையில் 'பர்பாமன்ஸ் கேப்சர் டெக்னாலஜி' முறையில் படமாக்கப்பட்டது,” எனத் தெரிவித்துள்ளார்.