'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் சில பாடல்கள் யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் 'எப்படி இருந்த நாங்க' என்ற நகைச்சுவைப் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. விவேக் மெர்வின் இசையமைப்பில் அந்தோணி தாசன் பாடியுள்ள அந்தப் பாடலின் சிறு வீடியோவைப் பகிர்ந்து ராஷ்மிகா படம் பற்றியும் தெரிவித்துள்ளார்.
“இந்த வீடியோவையும் பாடல் வரிகளையும் கேளுங்கள்.. இதைவிட சிறப்பாக இருக்க முடியாது. இந்தக் குறிப்பிட்ட காட்சி படமாக்கப்படும் போது நானும் அதைத்தான் நினைத்தேன். இந்தக் கதாபாத்திரத்தை நான் எவ்வளவு ரசித்து நடித்தேன் என்பதை நீங்கள் விரைவில் பார்க்கப் போகிறீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாடலில் ஒரு நிலத்தில் குட்டி டிராக்டரை வைத்து அவர் உழும் காட்சி இடம் பெற்றுள்ளது. சேற்றில் குட்டி டிராக்டரை ஓட்டுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதிலும் ஒரு பெண் ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கும். அக்காட்சியில் ராஷ்மிகா அதை நன்றாகவே செய்திருக்கிறார். தான் அந்தக் காட்சியில் நடிக்க சிரமப்பட்டதும் அதற்கேற்றாற் போல பாடல் வரி 'எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம், வான்ட்டடா வந்து மாட்டிக்கிட்டோம்” என பொருத்தமாக இருப்பதைத்தான் ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.