‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்தவர், மீண்டும் தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது பீஸ்ட் படத்தில் விஜய் உடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பேட்டிகளில் கூறி வருகிறார் பூஜா ஹெக்டே.
அவர் கூறுகையில், நான் இதுவரை நடித்த ஹீரோக்களில் விஜய் தான் மிகவும் எளிமையான நடிகராக இருக்கிறார். அனைவரிடத்திலும் அன்பாகவும் பழகுகிறார். அதோடு ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்திற்கு அதிகாலையிலேயே வந்து மேக்கப் போட்டுக் கொண்டு இயக்குனர் ஆக்சன் சொல்வதற்கு முன்பே கேமரா முன்பு வந்துவிடுகிறார். படப்பிடிப்பு தளத்துக்குள் வந்துவிட்டால் அந்த படத்தை பற்றி மட்டுமே பேசுகிறார்.
அதோடு தன்னுடன் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். பாடல் காட்சிகள் மட்டுமின்றி வசன காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தும் விஜய் சின்னச் சின்ன விஷயங்களில் கூட அதிகப்படியான கவனம் செலுத்துகிறார்.
இதுவரை எத்தனையோ முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ஆனால் விஜய்யை போன்று ஒரு கடினமான உழைப்பாளியை இதுவரை நான் பார்க்கவில்லை என்று தெரிவித்திருக்கும் பூஜா ஹெக்டே, என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது விஜய்தான் என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.