‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தை இயக்கி தயாரித்த பார்த்திபன் தான் மட்டுமே படம் முழுக்க நடித்து இருந்தார். அதையடுத்து அந்த படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து ரீமேக் செய்திருக்கிறார். மேலும் தற்போது எழில் இயக்கத்தில் யுத்த சத்தம் என்ற படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்திருக்கிறார் பார்த்திபன்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பார்த்திபன் பேசுகையில், ‛‛யுத்த சத்தம் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தில் தான் செய்த சில மாற்றங்களை இயக்குனர் எழில் நேர்மையான முறையில் கையாண்டுள்ளார். இன்றைக்கு பெரும்பாலான இயக்குனர்கள் ஒரு இயக்குனர் தான் எழுதிய காட்சிகளை படமாக்கும்போது எனக்கு எதுவும் தெரியவில்லை என்பது போலவும், புதிதாக அவர்கள் சொல்லிக் கொடுப்பது போலவும் நடந்து கொள்வார். ஆனால் இயக்குனர் எழில் நான் செய்த சில மாற்றங்களை ஏற்றுக் கொண்டதோடு மேடையில் என்னை பாராட்டியுள்ளார். இது அவரது நேர்மையை வெளிப்படுத்துகிறது என்றார்.
மேலும் தனது இரவின் நிழல் படம் குறித்தும் ஒரு தகவல் வெளியிட்டார். அதாவது இந்த படத்தை 100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டில் படமாக்கி இருக்கிறோம். இதற்காக பத்து வருடங்கள் போராடி 90 நாட்கள் பயிற்சி எடுத்து படமாக்கி உள்ளேன். அதோடு 64 ஏக்கரில் 58 செட்டுகள் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரே ஷாட்டில் எடுத்ததை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். வெட்டி ஒட்டியது என தெரிவித்துள்ளார்கள். அந்த அளவுக்கு ஒரே ஷாட்டில் தத்ரூபமாக படமாக்கி இருக்கிறோம். இதுவே எனக்கு கிடைத்த பெருமை என்கிறார் பார்த்திபன்.