காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் |
தமிழில் “துருவங்கள் 16“, “இருட்டு அறையில் முரட்டு குத்து“, “நோட்டா“, “ஜாம்பி“ போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அடுத்ததாக சல்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது“, “இவன் தான் உத்தமன்“, “ராஜபீமா“ என பிஸியாக நடித்து வருகிறார்.
சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர்களில் யாஷிகாவும் ஒருவர். அடிக்கடி தனது கவர்ச்சியான படங்களை பதிவிடுவது அவரது ஸ்டைல். இதனாலேயே அவருக்கு நிறைய பாலோயர்கள் உள்ளனர்.
இந்நிலையில் துபாய் விலங்கு நல பூங்கா ஒன்றில் தான் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார் யாஷிகா. அதில், அங்கிருக்கும் விலங்குகளோடு கொஞ்சி விளையாடும் யாஷியா, ஒட்டகம் ஒன்றிற்கு சிறு துண்டு இலையை தனது வாயில் வைத்துக் கொடுக்கிறார். ஒட்டகமும் அவரிடம் இருந்து அதைப் பிடுங்கி சாப்பிடுகிறது.
பார்ப்பதற்கு இந்தக் காட்சி காதலர்களின் ரொமான்ஸ் மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். கூடவே ஒட்டகத்திற்கு இலையைக் கையில் தரக் கூடாதா என திட்டவும் செய்துள்ளனர்.