மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் 'சில நொடிகளில்'. மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ் ஜார்னரில் தயாராகி உள்ள இந்த படம் வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முழு படமும் லண்டனில் தயாராகி உள்ளது. படத்தில் ரிஷியும், புன்னகை பூ கீதாவும் அன்பான கணவன் மனைவி. இவர்களின் வாழ்க்கைக்கு இடையில் வருகிறார் மாடல் அழகி யாஷிகா ஆனந்த். ரிஷியின் முன்னாள் காதலி. அவருக்கு ஒரு பெரிய பிரச்சினை. இப்படியான கதையில் என்ன தீர்வு என்பதுதான் படம்.
படத்தில் நடித்திருப்பது பற்றி யாஷிகா ஆனந்த் கூறும்போது “நிஜத்தில் நான் ஒரு மாடல் அழகி. படத்திலும் மாடல் அழகியாக நடித்திருக்கிறேன். அதனால் நடிக்க மிகவும் எளிதாக இருந்தது. 'துருவங்கள் பதினாரு' என்ற திரில்லர் படத்தில் இருந்துதான் எனது சினிமா தொடங்கியது. நானும் திரில்லர் படத்தின் மிகப்பெரிய ரசிகை அதனால் இந்த படத்தில் விரும்பி நடித்தேன். ரிச்சர்டுடன் நடித்ததன் மூலம் அவர் எனக்கு நல்ல நண்பர் ஆனார். இதன் மூலம் நான் அஜித் சாருக்கும் நெருக்கமாகி இருக்கிறேன். அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகை நான். என்றார்.