டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் 'சில நொடிகளில்'. மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ் ஜார்னரில் தயாராகி உள்ள இந்த படம் வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முழு படமும் லண்டனில் தயாராகி உள்ளது. படத்தில் ரிஷியும், புன்னகை பூ கீதாவும் அன்பான கணவன் மனைவி. இவர்களின் வாழ்க்கைக்கு இடையில் வருகிறார் மாடல் அழகி யாஷிகா ஆனந்த். ரிஷியின் முன்னாள் காதலி. அவருக்கு ஒரு பெரிய பிரச்சினை. இப்படியான கதையில் என்ன தீர்வு என்பதுதான் படம்.
படத்தில் நடித்திருப்பது பற்றி யாஷிகா ஆனந்த் கூறும்போது “நிஜத்தில் நான் ஒரு மாடல் அழகி. படத்திலும் மாடல் அழகியாக நடித்திருக்கிறேன். அதனால் நடிக்க மிகவும் எளிதாக இருந்தது. 'துருவங்கள் பதினாரு' என்ற திரில்லர் படத்தில் இருந்துதான் எனது சினிமா தொடங்கியது. நானும் திரில்லர் படத்தின் மிகப்பெரிய ரசிகை அதனால் இந்த படத்தில் விரும்பி நடித்தேன். ரிச்சர்டுடன் நடித்ததன் மூலம் அவர் எனக்கு நல்ல நண்பர் ஆனார். இதன் மூலம் நான் அஜித் சாருக்கும் நெருக்கமாகி இருக்கிறேன். அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகை நான். என்றார்.




