பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மவுலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் 'டாஸ்'. கவர்ச்சி நடிகையாக, ஒரு பாட்டுக்கு ஆடுபவராக, இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த யாஷிகா இந்த படத்தில் கதை நாயகியாக நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில் ''மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும், கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் கிரைம் திரில்லர் படம் டாஸ். யாஷிகாவுடன், தெலுங்கு திரையுலகில் இருந்து வந்திருக்கும் தேஜாஸ்ரீ இன்னொரு நாயகியாக நடிக்கிறார். கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் ரிலீஸ்'' என்கிறார்.
ஒரு கட்டத்தில் பல படங்களில் நடித்து வந்த யாஷிகாவுக்கு மாமல்லபுரத்தில் நடந்த விபத்து, தோழி உயிரிழப்பு காரணமாக மார்க்கெட் டல் ஆனது குறிப்பிடத்தக்கது.