பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஜயின் கில்லி, சச்சின் படங்களுக்கு பின் குஷி இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. கில்லி, சச்சின் படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படக்குழுவை குறிப்பாக, அந்த படங்களின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், எஸ்.தாணுவை சந்தித்தார் விஜய். இயக்குனர் தரணி, ஜான் மகேந்திரனிடம் படம் குறித்து விசாரித்தார். இப்போது குஷி ரீ ரிலீஸ் ஆகியிருப்பதால், அந்த படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை படம் ஹிட்டானால் விஜய் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யும், எஸ்.ஜே.சூர்யாவும் ஏனோ குஷிக்கு பின் இணையவில்லை. ஆனால், நண்பன், மெர்சல், வாரிசு படங்களில் இணைந்து நடித்தனர். இன்றும் விஜய்யை பாராட்டி பேட்டி அளித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அதனால், சந்திப்பு நடக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது குஷி 2 குறித்து விஜயிடம் எஸ்.ஜே.சூர்யா சில விஷயங்களை பகிரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கில்லி, சச்சின் ரீ ரிலீஸ் ஆனபோது அந்த படங்களின் ஹீரோயின் திரிஷா, ஜெனிலியா ஆகியோர் படம் குறித்து பேசினார்கள். ஆனால், குஷி ரீ ரீலீஸ் குறித்து இன்றுவரை ஜோதிகா எதுவும் பேசவில்லை.