காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
திகில் படமா, கிரைம் த்ரில்லர் படமா, பேய் படமாக கூப்பிடுங்கள் யாஷிகா ஆனந்த்தை என்கிற நிலைதான் இப்போது. ஏற்கெனவே பல திகில் படங்களில் நடித்து முடித்து விட்ட யாஷிகா ஆனந்த் தற்போது நடித்துள்ள படம் 'படிக்காத பக்கங்கள்'.
இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. செல்வம் மாதப்பன் இயக்கி உள்ளார். யாஷிகாவுடன் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்காடுக்கு ஒரு குழுவினர் சுற்றுலா செல்கிறார்கள். அவர்கள் தங்கி உள்ள ரிசார்ட்சில் ஒரு பிரபல நடிகை கொல்லப்படுகிறார். அதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் கதை.