யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
விஷால் தயாரித்து நடித்து சமீபத்தில் வெளியான படம் சக்ரா. இதில் வில்லியாக நடித்துள்ளார் ரெஜினா கெசாண்ட்ரா. அவர் அளித்த பேட்டி வருமாறு:
தெலுங்கில் ஒரு படத்தில் வில்லியாக நடித்தேன். அதை பார்த்ததுவிட்டுதான் சக்ரா படத்தில் வில்லியாக நடிக்க அழைத்தார்கள். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இளம் வயதில் படிக்க முடியாத ஏக்கத்தில் தனக்கிருக்கும் கம்ப்யூட்டர் அறிவை பயன்படுத்தி கொள்ளை அடித்து அதை கொண்டு படிக்க நினைக்கிற கேரக்டர் எனக்கு பிடித்திருந்தது.
சக்ராவுக்கு பிறகும் நிறைய வில்லி வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து வில்லியாக நடித்தால் வில்லி நடிகை என்கிற இமேஜ் ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். அதுபற்றி கவலைப்படவில்லை.
நான் நடிக்கும் நெகட்டிவ் கேரக்டர்களை வில்லியாக நான் பார்க்கவில்லை. வித்தியாசமான கேரக்டர்களாக பார்க்கிறேன். தற்போது 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். அதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை குறைத்திருக்கிறேன்.
நான் நடித்து முடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்யுடன் நடிக்கும் படத்தில் ஆக்ஷன் ஹீரோயின். நிறைய சண்டை காட்சிகள் படத்தில் இருக்கிறது. என்றார்.