அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் |
1948ம் ஆண்டு ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த படம் 'சக்ர தாரி'. சக்ரத்தை தாங்கி நிற்பவன் என்று இதன் பொருள். அதாவது கிருஷ்ணரை குறிக்கும் சொல்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டர்பூர் என்ற கிராமத்தில் கோரகும்பர் என்ற கிருஷ்ண பக்தர் இருந்தார். சதாசர்வ காலமும் அவர் கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டு சம்பாதிக்காமல் இருப்பது மனைவிக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் பானை செய்வதற்கு மண் மிதிக்கும்போது தன் குழந்தை காலுக்கு அடியில் விளையாடுவதைகூட மறந்து தன் குழந்தையையும் மிதித்து கொன்று விடுகிறார். அதன்பின் கணவன் மனைவி இடையே நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
புகழ்பெற்ற இந்த கதை இந்தியாவின் பல மொழிகளில் திரைப்படமானது. தமிழில் 'சக்ர தாரி' என்ற பெயரில் தயாரானது. இதில் கோரகும்பராக சித்தூர் நாகைய்யா நடித்தார். அவரது மனைவியாக புஷ்பவல்லி நடித்தார். ஜெமினி கணேசன் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார்.
படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டாது. படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு பிறகு படத்தை கேவா கலர் டெக்னாலஜிக்கு மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அப்போதும் 50 நாட்கள் வரை ஓடியது.