நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கன்னடத்தில் 2016ல் வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தானா. தெலுங்கில் தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார்.
தமிழில் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். அடுத்து அவரை தங்களது படங்களிலும் நாயகியாக நடிக்க வைக்க சில முன்னணி நடிகர்கள் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், ராஷ்மிகாவின் டார்க்கெட்டோ பாலிவுட்டை நோக்கி இருக்கிறது.
தற்போது ஹிந்தியில் 'மிஷன் மஜ்னு' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்து அமிதாப்பச்சன் நடிக்கும் 'டெட்லி' படத்திலும் நடிக்க உள்ளார். சமீபத்தில் ராஷ்மிகா நடித்த ஹிந்தி ஆல்பமான 'டாப் டக்கர்' வீடியோ 5 கோடி பார்வைகளை நெருங்க உள்ளது. இதனால் ராஷ்மிகா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.
தெலுங்கைப் போலவே ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என முயற்சித்து வருகிறாராம். இதனால், தற்போது மும்பையில் சொந்தமாக விலை உயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளாராம். ஹைதராபாத்திலும் இது போலவே ஒரு பிளாட்டை ஏற்கெனவே வாங்கியுள்ளார் ராஷ்மிகா.
அதனால், இனி தமிழ்ப் படங்களில் நடிக்க ராஷ்மிகா ஆர்வம் காட்டுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.