பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'த்ரிஷயம்'. அப்படத்தை தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 2015ல் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். தமிழிலும் இப்படம் வெற்றி பெற்றது.
தற்போது 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகத்தை அதே குழு உருவாக்கியுள்ளது. படம் பிப்ரவரி 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முதல் பாகக் கதையின் தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
முதல் பாகத்தை கமல்ஹாசன் ரீமேக் செய்தது போல இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்வாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கமல்ஹாசன் ஏற்கெனவே ஆரம்பித்த 'இந்தியன் 2, விக்ரம், தலைவன் இருக்கிறான்' ஆகிய படங்களை முடித்தாக வேண்டும். அதற்குப் பிறகே அவர் 'பாபநாசம்' படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.
அப்படியே இரண்டாம் பாகம் உருவானாலும் கவுதமி நடிக்க வாய்ப்பில்லை. இருவரும் பிரிந்துவிட்டார்கள். எனவே, வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க வேண்டும். அப்படி நடிக்க வைத்தால் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுப்பது பொருத்தமாக இருக்காது. எனவே, 'பாபாநாசம் 2' படம் உருவாக வாப்பில்லை என்றே தோன்றுகிறது.