ஒரே நேரத்தில் 5 படங்களா? : சிம்பு விளக்கம் அளிப்பாரா | இன்று ஸ்ரீலீலாவுக்கு பிறந்தநாள் : ரசிகர்கள் வாழ்த்து | தக் லைப் : ஓடிடி விலை, மறுபரிசீலனை பேச்சுவார்த்தை? | நானியை சந்தித்த 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் | ‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'த்ரிஷயம்'. அப்படத்தை தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 2015ல் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். தமிழிலும் இப்படம் வெற்றி பெற்றது.
தற்போது 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகத்தை அதே குழு உருவாக்கியுள்ளது. படம் பிப்ரவரி 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முதல் பாகக் கதையின் தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
முதல் பாகத்தை கமல்ஹாசன் ரீமேக் செய்தது போல இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்வாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கமல்ஹாசன் ஏற்கெனவே ஆரம்பித்த 'இந்தியன் 2, விக்ரம், தலைவன் இருக்கிறான்' ஆகிய படங்களை முடித்தாக வேண்டும். அதற்குப் பிறகே அவர் 'பாபநாசம்' படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.
அப்படியே இரண்டாம் பாகம் உருவானாலும் கவுதமி நடிக்க வாய்ப்பில்லை. இருவரும் பிரிந்துவிட்டார்கள். எனவே, வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க வேண்டும். அப்படி நடிக்க வைத்தால் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுப்பது பொருத்தமாக இருக்காது. எனவே, 'பாபாநாசம் 2' படம் உருவாக வாப்பில்லை என்றே தோன்றுகிறது.