படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
தற்போது பாலிவுட் சினிமா வரை கொடி நாட்டி இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், காமெடியன் என கலவையான வேடங்களில் நடித்து வரும் அவர் சமீபகாலமாக சில சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கிக் கொண்டு வருகிறார்.
அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் உருவாக இருந்த 800 படம் மற்றும் துக்ளக் தர்பார் படத்தில் சீமானை அட்டாக் செய்திருப்பது போன்ற டீசர் வெளியான போதும் பரபரப்பு வளையத்திற்குள் வந்தார். அதன்பிறகு தனது பிறந்த நாளின்போது பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டினார். அந்த போட்டோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில், நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, மாஸ்டர் படம் மூலம் திரையரங்குகளுக்கு ரசிகர்களை மீண்டும் கொண்டு வந்ததற்காக விஜய் உள்பட மாஸ்டர் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதையடுத்து அவரிடத்தில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் உருவாக இருந்த 800 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, 800 படம் குறித்த பிரச்சினை முடிந்து விட்டது. அதனால் அதை மீண்டும் கிளற வேண்டாம் என்று அதுகுறித்து பதிலளிக்க மறுத்து விட்டார் விஜய் சேதுபதி.