பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இந்தியத் திரையுலகமே வியக்க வைக்கும் அளவிற்கு திரும்பிப் பார்க்க வைத்த படம் 'பாகுபலி'. அப்படத்தின் இரண்டு பாக வசூலும் தென்னிந்திய சினிமா மீதான கடந்த கால ஒப்பீட்டை அப்படியே மாற்றியது.
'பாகுபலி' தந்த பாதையில் மற்ற தென்னிந்திய மொழி திரையுலகினரும் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 'பாகுபலி' அளவிற்கு வசூல் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட தமிழ்ப் படமான '2.0' ரசிகர்களையும், தயாரிப்பாளரையும் ஏமாற்றியது.
இருந்தாலும் அடுத்து வந்த கன்னடப் படமான 'கேஜிஎப்', தெலுங்குப் படமான 'சாஹோ', தென்னிந்தியப் படங்களின் வசூல் சாதனையைப் பற்றி இந்தியா முழுவதும் பேச வைத்தது.
கடந்த வருடம் கொரானோ தொற்று காரணமாக பிரம்மாண்டப் படங்கள் வெளிவரவில்லை. அவை இந்த ஆண்டில் வெளிவர உள்ளது. கன்னடத் திரையுலகத்திலிருந்து 'கேஜிஎப் 2', தெலுங்குத் திரையுலகத்திலிருந்து 'ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் சில மாத இடைவெளியில் வெளியாக உள்ளன.
இப்படங்களின் வியாபாரம் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படங்களின் வட இந்திய உரிமை, வெளிநாட்டு உரிமை, தமிழ் உரிமை ஆகியவை விலை பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கிறார்கள்.
இந்த இரண்டு படங்களின் வசூல், தென்னிந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகுமென டோலிவுட்டிலும், சாண்டல்வுட்டிலும் பேசிக் கொள்கிறார்கள்.