ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்தவர் சந்தானம். திடீரென நடித்தால் நாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்ற கொள்கை முடிவை எடுத்தார்.
அவர் நாயகனாக நடித்த முதல் படம் தோல்வியடைந்தாலும் அதன்பின் வெற்றியை ருசிக்க ஆரம்பித்தார். 2016ல் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' அவருக்கு நாயகனாக முதல் வெற்றியைக் கொடுத்தது.
தொடர்ந்து 'தில்லுக்கு துட்டு 2, ஏ 1, டகால்டி' ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. கடந்த வருடம் வெளிவந்த 'பிஸ்கோத்' சுமாரான வெற்றியைத்தான் கொடுத்தது.
தற்போது மேலும் சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தானம். அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள 'டிக்கிலோனா' படம் வெளியாக உள்ளது. அதற்குப் பிறகு 'சபாபதி, பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்கள் வெளியாகலாம்.
மேலும், சில வருடங்களுக்கு முன்பே முடிந்து வெளியாகாமல் இருக்கும் 'சர்வர் சுந்தரம்' படமும் இந்த வருடத்தில் வெளியாகலாம்.
அவர் நாயகனாக நடித்து வந்த 'மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும்' ஆகிய படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்குமா என்பது சந்தேகம்தான். மேலும், சில புதிய படங்களில் அடுத்தடுத்து அவர் நடிக்க ஒப்பந்தமாகலாம் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 2021ம் ஆண்டில் சந்தானம் நாயகனாக நடிக்கும் நான்கைந்து படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.