புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்தவர் சந்தானம். திடீரென நடித்தால் நாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்ற கொள்கை முடிவை எடுத்தார்.
அவர் நாயகனாக நடித்த முதல் படம் தோல்வியடைந்தாலும் அதன்பின் வெற்றியை ருசிக்க ஆரம்பித்தார். 2016ல் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' அவருக்கு நாயகனாக முதல் வெற்றியைக் கொடுத்தது.
தொடர்ந்து 'தில்லுக்கு துட்டு 2, ஏ 1, டகால்டி' ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. கடந்த வருடம் வெளிவந்த 'பிஸ்கோத்' சுமாரான வெற்றியைத்தான் கொடுத்தது.
தற்போது மேலும் சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தானம். அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள 'டிக்கிலோனா' படம் வெளியாக உள்ளது. அதற்குப் பிறகு 'சபாபதி, பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்கள் வெளியாகலாம்.
மேலும், சில வருடங்களுக்கு முன்பே முடிந்து வெளியாகாமல் இருக்கும் 'சர்வர் சுந்தரம்' படமும் இந்த வருடத்தில் வெளியாகலாம்.
அவர் நாயகனாக நடித்து வந்த 'மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும்' ஆகிய படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்குமா என்பது சந்தேகம்தான். மேலும், சில புதிய படங்களில் அடுத்தடுத்து அவர் நடிக்க ஒப்பந்தமாகலாம் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 2021ம் ஆண்டில் சந்தானம் நாயகனாக நடிக்கும் நான்கைந்து படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.