புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சென்னை : விஜய் பெயரில் ஆரம்பித்த கட்சிக்கு, தேர்தல் ஆணையம் அனுமதி தராத நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், தன் பெயரில், புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளார்.
நடிகர் விஜய் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் பெயரில், கட்சிஆரம்பிக்க இருந்தார். இதற்காக, மூன்று பெயர்களை தேர்வு செய்து, மத்திய தேர்தல் ஆணையத்திற்கு, எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், தன் பெயரில் கட்சி ஆரம்பிக்க, விஜய் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சி ஆரம்பித்தால், தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் என கருதிய விஜய், இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம்அனுப்பினார். எஸ்.ஏ.சந்திரசேகர் பரிந்துரை செய்த, மூன்று பெயர்களில், விஜய் பெயர் இடம் பெற்றதால், அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரவில்லை. மாற்று பெயரை தேர்வு செய்ய அறிவுறுத்தியது.
இந்நிலையில்,அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்புக்குள், புதிய கட்சியை ஆரம்பித்து, நிர்வாகிகளை நியமிக்கும் பணியில், அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.