ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
சிவா இயக்க, அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'வேதாளம்'. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆசைப்பட்டார். மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாக இப்படத்திற்கான கதை விவாதம் கூட நடந்து முடிந்ததாகத் தகவல் வெளியானது.
சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோரிடம் கூட பேச்சு வார்த்தை நடத்தியதாகச் சொன்னார்கள். இதனிடையே, தற்போது நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்திற்குப் பிறகு 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கத் தயாராகிவிட்டார் சிரஞ்சீவி. இதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது.
'வேதாளம்' ரீமேக்கை தள்ளி வைத்துவிட்டார் எனச் சொல்கிறார்கள். இப்படத்திற்காக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டி உள்ளதால், கொரோனா தொற்று மிகவும் குறைந்த பிறகு இப்படத்தில் நடிக்கலாம் என அவர் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம்தான் சிரஞ்சீவி ரீ-என்ட்ரி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.